Friday 3rd of May 2024 09:35:33 AM GMT

LANGUAGE - TAMIL
அத்தியாவசியப் பொருட்களாக ஐஸ், கஞ்சா, ஹெரோயின் !

அத்தியாவசியப் பொருட்களாக ஐஸ், கஞ்சா, ஹெரோயின் !


கொழும்பில் இருந்து மட்டக்களப்பு - காத்தான்குடிக்கு லொறியில் அத்தியாவசிய பொருட்களுடன் போதைப் பொருட்களை கடத்திச்சென்ற மூவரை இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து லொறியை வாழைச்சேனை பகுதியில் வழிமறித்த பொலிஸார் சோதனையிட்டபோது போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்த லொறியில் அத்தியாவசிய பொருட்களுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 கிராம் 20 மில்லி ஜஸ்போதைப் போதைப்பொருள் , 6 கிராம் 960 மில்லி கஞ்சா , 104 மில்லிக்கிராம் கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி உட்பட மூவரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் , இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்


Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE